…..ஒரு நாளைக்கு ஆடவல்லானெனும் மரக்காலால் நிசதம் நெல்லு தூனிப்பதக்கு ஒருநாழியுரியாக ஒராட்டைக்கு நெல்லு 185 கலனெ 7 குறுணி நானாழிக்குத் தஞ்சாவூர் உடையார் பெரும் பண்டாரத்தெ ஆட்டை வட்டம் காசு ஒன்றுக்கு முக்குறுணி நெல்லுப் பொலிசையூட்டாக அட்ட வைத்த காசு 743.
ஆலையத்துப்பிள்ளையார் கணபதியார்க்கு அமுது செய்தருள நிசதம் வாழைப்பழம் 150 ஆக ஒராட்டைக்கு வந்த வாழைப்பழம் ஐம்பத்து நாலாயிரத்துக்கு காசு ஒன்றுக்கு வாழைப்பழம் 1200 ஆக வந்த காசு 45 க்கு காசு ஒன்றுக்கு ஆட்டை வட்டம் அரைக்காற்காசு பொலிசையூட்டாக சந்திராதித்யவத் செல்ல வைத்த காசு 360.
பாதாதிகேஸாந்தம் 1 முழமே 4 விரலரை உசரத்து 2 திருக்கையுடையராகக்கனமாக பெருமாள் ப்ரதிமம். உருத்ராக்ஷத்தாழ்வடம் ஒன்றிற்பொன்னின் சுரி 56ம் உருத்ராக்ஷம் 56ம் உட்பட நிறை எண்கழஞ்செய் ஒன்பது மஞ்சாடிக்கு விலை காசு 25.
செப்புத்திருமேனி கோயிலில் முழத்தால் அளந்தும் ரத்னங்கள் சரடுசட்டமும் நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆடவல்லான் என்னுங்கல்லால் நிறை எடுத்தும்.
இருபத்தொரு விரலெய் ஆறு தோரை உசரத்து ஒரு முழமேய் பதினொரு விரலே இரண்டு தோரைச்சுற்றில் எழுந்தருளுவித்த கபுணதேவர். புஞ்சைமுத்து 436னால் நிறை கழஞ்சரையெ 2 மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு கால், 817னால் நிறை முக்கழஞ்சரைக்கு விலை காசு அரை.
வயிரம் 10னால் நிறை மஞ்சாடியுங் குன்றியும் உள்ளரக்கும் பந்தமும் ஆக நிறை 176 கழஞ்சரையே 3 மஞ்சாடியும். நிறை 1051 கழஞ்செ ஒன்பது மஞ்சாடியுங் குன்றிக்கு விலை காசு 2000. பவழம் 24னால் நிறை கழஞ்சு ஆக நிறை அறுபத்தைங்கழஞ்சரையெ மூன்று மஞ்சாடிக்கு விலை காசு 90.
தளிச்சேரிப்பெண்டுகளுக்கும் நிவந்தமாகப் பங்கு செய்தபடி பங்கு வழி பங்கு ஒன்றினால் நிலன் வேலியினால் ராஜகேஸரியொடொக்கும் ஆடவல்லானென்னும் மரக்காலால் நெல்லு நூற்றுக்கலமாகவும்
திருவிலாவில் ராஜரானெஸ்வர நாடகமாட இவனுக்கு இவன் வர்க்கத்தார்க்கும் காணியாகப் பங்கு ஒன்றுக்கு ஆடவல்லானென்னும் மரக்காலால் நித்த நெல்லுத்தூணியாக நூற்றிருபதின் கலநெல்லும் ஆட்டாண்டு தோறும் தேவர் பண்டாரத்தேய் பெறச்சந்திராதிதவற் வெட்டியது.
திக்விஜயமாக வேணும் என்று கொடுத்த பெரிய பட்டம் ஒன்று எட்டரை மாறி பொன் தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது, பட்டம் ஒன்று எட்டு மாறி தூக்கம் 17 பண இடை 8, பட்டம் ஒன்று 8 மாறி தூக்கம் 6 பண இடை இரண்டு, மூக்குத்தி நிறை பண இடை 2 etc.
யாண்டு மூன்றாவது வரைகுடுத்த செம்புந்தராவும் வெண்கலமும் ஆடவல்லான் என்னுந் திலாக்கோலால் நிறையெடுத்துக்கல்லில் வெட்டின………வெண்கலத்தளிகை ஒன்று நிறை 75 பலம், வெண்கலக்கைச்சொலம் ஒன்று நிறை நாற்பலனெகைசு, வெண்கலத்தட்டம் ஒன்று நிறை ஒருபலனெ கைசு.
யாண்டு பத்தாவது பசானமுதல் கொண்ட காசு இருநூறினால் காசு ஒன்றுக்கு ஆட்டைவட்டன் ஆடவல்லானென்னும் மரக்காலால் முக்குறுணி நெல்லுப்பொலிசையாக ஆட்டாண்டு தோறும் தஞ்சாவூர் உடையார் பெரும்பண்டாரந் தஞ்சைவிடங்கனிலேய் மரக்காலால் அளக்கக்கடவ நெல்லு 50ன் கலம்.
பொன் 25 கழஞ்செ கால், ரத்னங்கள் சரடு நீக்கி தக்ஷிணமேருவிடங்கன் என்னுங்கல்லால் நிறை எடுத்தும் பொன் ஆட்டவலான் என்னுங்கல்லால் நிறை எடுத்துங்கல்லில் வெட்டினபடி கொம்பிற்கொள்கை ஒன்றில்த் தடவிக்கட்டின மாணிக்கம் எட்டுந்தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் பளிக்குவயிரம் பதிநாலும் முத்து வட்டமும் அனுவட்டமும் ஒப்புமுத்துங் குறுமுத்துஞ்சப்பத்தியும் ஆக முத்து நூற்றொருபத்தொன்பதும் பொன்னும் அரக்கும் உட்பட நிறை பதினாற்கழஞ்செ முக்காலெ மஞ்சாடிக்கு விலை காசு இருபத்து மூன்று.பொன் எண்கழஞ்சரையே மஞ்சாடியுங்குன்றிக்கு விலை காசு 18. etc.
சங்கிட்டு அடைத்த கற்கண்டு ஒன்றில் தடவிக்கட்டின பளிங்கு இரண்டும் பொன்னின் காம்பும் உட்பட நிறை நாற்கழஞ்சுக்கு விலை காசு ஒன்றேய் கால், திரள்மணிவட்டம் ஒன்று பொன் ஒன்பதின் கழஞ்செய் மூன்று மஞ்சாடி.